தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா

News image

விழாவில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி.

Updated On :9 மார்ச் 2026, 5:12 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் எஸ். தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் எம்.எம்.ஜெ.உம்முல்பரிதா, எம்.ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பெண் ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.

இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், அரசு வழக்குரைஞா்கள், நீதித்துறை அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.