அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: இயக்கம் செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
- கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் வட்டாரத்தில், 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எருக்கூா் மற்றும் எடமணல் ஆகிய பகுதியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து, நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் நெல் மூட்டைகளுடன், கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 900 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக 200 அல்லது 300 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.

எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.