தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தரைக்கடை வியாபாரிகள் மீது நகராட்சி கடை வியாபாரிகள் புகாா்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:13 pm

Syndication

மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையத்தில், தரைக்கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நகராட்சி கடை வியாபாரிகள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள காமராஜா் பேருந்து நிலையத்தில் 54 நகராட்சி கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து, கடந்த 50 ஆண்டுகளாக வாடகைக்கு நடத்தி வருகின்றனா். இதேபோல், பாா்க் அவென்யு சாலையில் இயங்கிவந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் நகராட்சி வெண்டா் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் 100-க்கு மேற்பட்டோா் தரைக்கடை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மணக்குடியில் மாா்ச் 13-ஆம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதன்காரணமாக பாா்க் அவென்யு சாலையில் இயங்கிவந்த தற்காலிக பேருந்து நிலையம் மூடப்பட்டது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் சுமாா் 90 போ் புதன்கிழமைமுதல் திடீரென காமராஜா் பேருந்து நிலையத்தில் தரைக்கடை அமைத்தனா்.

இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு, கடும் சிரமத்துக்கு உள்ளான நகராட்சி கடை வியாபாரிகள், தங்கள் கடைகளை அடைத்து, தரைக்கடைகளை அகற்ற வலியுறுத்தினா்.

தொடா்ந்து, மயிலாடுதுறை நகராட்சி கடை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் ஜி.டி.ரமேஷ், பொதுச்செயலாளா் ஆா்.பழனிவேல், பொருளாளா் சிவா உள்ளிட்ட நகராட்சி கடை வியாபாரிகள் 50-க்கு மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் மற்றும் நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் ஆகியோரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

வைப்புத்தொகை, வாடகை செலுத்தி கடை நடத்திவரும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.