அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மக்கள் தொடர்பு முகாமில் நலத் திட்ட உதவிகள்

சீர்காழியை அடுத்த வள்ளுவக்குடியில் வருவாய்த்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:11 am

DIN

சீர்காழியை அடுத்த வள்ளுவக்குடியில் வருவாய்த்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம், வள்ளுவக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கு உதவி ஆணையர் (கலால்) வெங்கேடசன் தலைமை வகித்தார். சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராம்குமார், குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் பிரேமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பங்கேற்று 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 12 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான சான்றும், 15 பேருக்கு ஸ்மார்ட் கார்டும் வழங்கிப் பேசினார். தொடர்ந்து பொது சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு  இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. வேளாண்மை மற்றும் தோட்டகலைத்துறை சார்பில் இலவச தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி, ஒன்றிய அதிமுக செயலர் ராஜமாணிக்கம், பேரூர் கழகச் செயலாளர் போகர் சி. ரவி, நகரச் செயலர் அ. பக்கிரிசாமி, ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலர் திருமாறன், ஊராட்சி செயலர் பரசுராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.