சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோழிக் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

கீழ்வேளூர் அருகே ஆற்றில் கோழிக் கழிவுகளை  கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:16 am

DIN

கீழ்வேளூர் அருகே ஆற்றில் கோழிக் கழிவுகளை  கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள கடுவையாற்றில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துர்நாற்றம் உண்டாவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு   ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
போராட்டத்தை அடுத்து அங்கிருந்த வணிகர்கள் உடனடியாக கோழிக் கழிவுகளை சுத்தம் செய்வதாகக் கூறியதை அடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.