திருக்கடையூரை அடுத்த காழியப்பநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காழியப்பநல்லூரில் டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என புகார் தெரிவித்து வரும் மாணவர்கள், இக்கோரிக்கையை வலியுறுத்தி, வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், நூலகத்தை முறையாகப் பாரமரிப்பதில்லை எனவும் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
தகவலறிந்த பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம், போலீஸாருடன் நிகழ்விடத்துக்குச் சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்பதாக நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!
கர்நாடகத்தைவிட்டு வெளியேற்றுவோம்: டாக்ஸிக் நடிகருக்கு நடிகை எச்சரிக்கை

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


