சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நினைவு தினம்: பெரியார் சிலைக்கு மரியாதை

நாகை மாவட்டம், குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை

Updated On :25 டிசம்பர் 2018, 8:48 am IST

நாகை மாவட்டம், குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பெரியார் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
குத்தாலத்தில்: குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு  திமுக சார்பில் கொள்கை பரப்பு துணைச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான க. அன்பழகன், ஒன்றியச் செயலர்கள் முருகப்பா, சங்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில், அதன் நிர்வாகி முருகையன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர காங்கிரஸ் துணைச் செயலர் சண்முகம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குத்தாலம் அஞ்சாறுவார்த்தலையில் உள்ள பெரியாரின்  சிலைக்கு அதிமுக சார்பில் மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் சி. ராஜேந்திரன், நகர செயலர் எம்.சி. பாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செம்பனார்கோவில்: செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிட கழக மாவட்ட துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, ஒன்றியச் செயலர் கனகலிங்கம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன், ஊராட்சி முன்னாள் தலைவர் ஷீலாராஜேந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் உஷா ராமநாதன், திமுக பொறுப்பாளர் ராம. அருள் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
சீர்காழியில்: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தேவா, முன்னாள் மாவட்டச் செயலர் ஸ்டாலின், கொள்ளிடம் ஒன்றிய பொறுப்பாளர் சக்திவேல், சீர்காழி ஒன்றிய பொறுப்பாளர்  மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.