வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சுற்றுலா வேன்களில் மதுபுட்டிகள் கடத்தல்: திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் கைது

புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து சுற்றுலா வேன்களில் மது புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற திருப்பூரைச் சேர்ந்த 3 பேரை நாகூர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 5:42 am IST

புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து சுற்றுலா வேன்களில் மது புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற திருப்பூரைச் சேர்ந்த 3 பேரை நாகூர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார், சனிக்கிழமை வாஞ்சூர் சோதனைச் சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலிலிருந்து வந்த 3 சுற்றுலா வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, அந்த வேன்களில் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. 
இதையடுத்து, 3 சுற்றுலா வேன்களையும், மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார்,  வேன் ஓட்டுநர்களான திருப்பூர், பெரியார் காலனியைச் சேர்ந்த பி. சுபேர்சேட் (31),  அவினாசி சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஜெ. இமானுவேல் (38), கூனம்பாடி ஈஸ்வரன்கோயில் தெருவைச் சேர்ந்த க. ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.