நாகை அருள்மிகு அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயிலின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
நாகை அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயில் அருகே உள்ளது அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரர் கோயில். இந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றத் தலமாக இது குறிப்பிடப்படுகிறது.
இக்கோயின் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவ விழா கடந்த 21 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் யாக பூஜைகள் நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை மாலை கயிலாய பீட ராவண வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தேர் வடம்பிடிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

