தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கூத்தாநல்லூரில் குடிநீர் குழாய்த் தொட்டி மூடல்: தினமணி செய்தி எதிரொலி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடந்த குடிநீர்க் குழாய்த் தொட்டி, தினமணி செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.

Updated On :14 மே 2018, 11:57 pm

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடந்த குடிநீர்க் குழாய்த் தொட்டி, தினமணி செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.
கூத்தாநல்லூர் ரேடியோ பார்க், பெரிய கடைத் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் குடிநீர்க் குழாய்த் தொட்டி பல மாதங்களாகத் திறந்து கிடந்தது. இதனால், அந்த வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர், குழந்தைகள் என பலரும் அதில் விழுந்து காயமடைந்தனர்.
இதுதொடர்பாக தினமணியில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் அறிவுறுத்தலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அந்த குடிநீர்க் குழாய்த் தொட்டியை சரிசெய்து மூடியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தினமணி நாளிதழையும், நகராட்சியையும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.