பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவிரி விவகாரம்: நாகை, திருவாரூரில் முற்றுகையில் ஈடுபட்ட 66 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்ட

Updated On :14 மே 2018, 11:52 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகப்பட்டினம், திருவாரூரில் மாவட்டஆட்சியரகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். இயற்கை வளத்தை சீரழிக்கும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோதிட்டங்களை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கே. பாஸ்கர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுஉறுப்பினர் எம். செல்வராசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வழக்குரைஞர் பாண்டியன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திமுழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 29 பேரை நாகூர் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக் குழுவினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் பெ. முருகேசு தலைமையிலும் மாநிலநிர்வாகக்குழு உறுப்பினர் கே. ராஜா, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போலீஸாரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போராட்டக் குழுவினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், நாகை மற்றும் திருவாரூரில் கைது செய்யப்பட்ட 66 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.