பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு கருத்தரங்கம்

விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை

Updated On :5 நவம்பர் 2018, 8:09 am IST

விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை அடுத்த நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய  இக்கருத்தரங்கில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாடர்ன் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம் கஸ்தூர்பாய் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சூழல் பொறியாளர் ராமசுப்பு, கருத்தாளர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விளக்கிப் பேசினர்.  கருத்தரங்க நிறைவில், மாணவர்கள் உறுதி மொழியேற்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு, ஆசிரியர்கள் ரகு, அருள் ஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அயூப் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் பிரியா வரவேற்றார். கற்பகவள்ளி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.