என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு கருத்தரங்கம்

விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை

Updated On :5 நவம்பர் 2018, 8:09 am IST

விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம், நாகையை அடுத்த நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய  இக்கருத்தரங்கில் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாடர்ன் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம் கஸ்தூர்பாய் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சூழல் பொறியாளர் ராமசுப்பு, கருத்தாளர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று விபத்தில்லாமலும், மாசில்லாமலும் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து விளக்கிப் பேசினர்.  கருத்தரங்க நிறைவில், மாணவர்கள் உறுதி மொழியேற்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு, ஆசிரியர்கள் ரகு, அருள் ஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அயூப் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் பிரியா வரவேற்றார். கற்பகவள்ளி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.