குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சீர்காழியில் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு

Updated On :13 பிப்ரவரி 2019, 6:56 am IST

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) இயந்திரத்தை இணைத்துள்ளது. இந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் நாம் வாக்களித்த சின்னம் பதிவான துண்டு சீட்டை 7விநாடிகள் பார்க்கலாம். இந்த இயந்திரம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சீர்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும் வரும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் வட்டாட்சியர் இரா.சங்கர் தலைமையில் நடைபெற்றது. மண்டல  துணை வட்டாசியர்கள் பாபு, சுவாமிநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜரத்தினம், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.