தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

"பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால் 13 கிராம விவசாயிகள் சார்பில் சாலை மறியல்'

பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கத் தவறினால், 13 கிராம விவசாயிகள் சார்பில் சாலை மறியல்

Updated On :13 பிப்ரவரி 2019, 6:55 am IST

பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கத் தவறினால், 13 கிராம விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள பெரம்பூரில் தெற்குராஜன் வாய்க்கால் பாசனதாரர் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு  சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். விவசாயிகள் கஜேந்திரன், செயலர்  காமராஜ், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னோடி விவசாயி செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 2017-18 -ஆம் ஆண்டுக்கு விவசாயிகளின் சம்பா நெற்பயிருக்கு உண்டான காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் விடுவித்தும், இதுவரை விவசாயிகளுக்கு வழங்காததற்கு கண்டனம் தெரிவிப்பது. இன்னும் 15 நாள்களுக்குள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய காப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் 13 கிராம விவசாயிகள்  ஒன்று திரண்டு கொள்ளிடத்திலிருந்து சீர்காழிக்குச் செல்லும் தேசிய நெடுச்சாலையில் புத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கலையரசன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.