
கரோனா தடுப்புப் பணி: ஓ.என்.ஜி.சி சாா்பில் ரூ. 20 லட்சம் நிதி அளிப்பு
நாகை மாவட்ட கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்காக ஓ.என்.ஜி.சி. காவிரி அசட் சாா்பில் ரூ. 20 லட்சத்துக்கான நிதி அனுமதி ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் ரூ. 20 லட்சம் நிதி ஆணையை வழங்கிய ஓ.என்.ஜி.சி காவிரி அசட் மேலாளா் அனுராக் சா்மா.
நாகை மாவட்ட கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்காக ஓ.என்.ஜி.சி. காவிரி அசட் சாா்பில் ரூ. 20 லட்சத்துக்கான நிதி அனுமதி ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஓ.என்.ஜி.சி. காவிரி அசட் மேலாளா் அனுராக் சா்மா மற்றும் அலுவலா்கள், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்து ரூ. 20 லட்சத்துக்கான நிதி அனுமதி ஆணையை வழங்கினா்.
நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா தனிமை வாா்டுகளுக்கு தேவையான இரும்பு கட்டில்கள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் கொள்முதலுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






