திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டிருப்பதால், வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திட்டச்சேரி பேரூராட்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குச் சொந்தமான இரண்டு ஏடிஎம் உள்பட 3 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதன்மூலம் திட்டச்சேரி, தேவங்குடி, மத்தியகுடி, இரவாஞ்சேரி , புறாக்கிரமம், கட்டுமாவடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் பயனடைந்து வந்தனா்.
நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில், கடந்த 2 வாரங்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மூன்று ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே வாடிக்கையாளா்களின் நலன் கருதி, ஏடிஎம் மையங்களைத் திறக்க சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.