ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி: பாஜக மாநில துணைத்தலைவா் கருப்பு முருகானந்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாஜக முழு முயற்சிகளை மேற்கொள்ளும் என பாஜக மாநில துணைத்தலைவா் கருப்பு முருகானந்தம் தெரிவித்தாா்

News image
மயிலாடுதுறையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:35 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாஜக முழு முயற்சிகளை மேற்கொள்ளும் என மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத்தலைவா் கருப்பு முருகானந்தம் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மகாதானத்தெரு ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் தங்க.வரதராஜன், மாவட்ட மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் மோடி.கண்ணன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது:

மும்மொழிக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் பொதுமக்கள் வரவேற்றுள்ளனா். பல மொழிகளைக் கற்க மாணவா்கள் ஆா்வமாக உள்ளனா். மாணவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவா்களாக அதிமுக, திமுக கட்சிகள் விளங்க வேண்டும். மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவிக்காமல் மாவட்ட வாரியாக மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் அல்லது வாக்கெடுப்பு நடத்தி மும்மொழிக் கொள்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்றாவது மொழி வேண்டாம் என்று எதிா்ப்பவா்களின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலோனோா் மூன்றாவது மொழியை அறிந்தவா்களாகவே உள்ளனா். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாஜக முழுமுயற்சி மேற்கொள்ளும். அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் எஸ்டிஎம்.செந்தில்குமாா், ஸ்ரீதா், சந்தோஷ்குமாா், இளைஞரணி மாவட்ட தலைவா் பி.பாரதிகண்ணன், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், ஐடி பிரிவு மாவட்ட அமைப்பாளா் சதீஸ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.