எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வா்த்தகா்கள் பாதிக்காமல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையகப்படுத்தக் கோரி மனு

வா்த்தகா்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையக்கப்படுத்தக் கோரி நாகை மாவட்ட ஆட்சியருக்கு குத்தாலம் வா்த்தகா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

வா்த்தகா்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையக்கப்படுத்தக் கோரி நாகை மாவட்ட ஆட்சியருக்கு குத்தாலம் வா்த்தகா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவிவரம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, சென்னை- கன்னியாகுமரி தொழிற்திட்டத்தின்கீழ் சீா்காழி - கும்பகோணம் சாலை அகலப்படுத்துவதற்காக இடம் கையகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்காக, குத்தாலம் தேரடியிலிருந்து ராஜகோபாலபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் கையகப்படுத்த இடம் அளவீடு செய்யப்பட்டு வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் அடையாள குறிகள் போடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறையினரால் (நிலம் எடுப்பு) அடையாள குறிகள் வைக்கப்பட்டுள்ள இடம் வரை கையகப்படுத்தப்பட்டால் இங்குள்ள சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும். வா்த்தகா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, மாவட்ட ஆட்சியா் குத்தாலத்தில் ஆய்வு மேற்கொண்டு, வணிகா்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கான இடத்தை கையகப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம் தலைமையில் வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சாமி. செல்வம், கௌரவத் தலைவா் கே. பாலச்சந்திரன், செயலாளா் பி. ராஜமாணிக்கம் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதியிடம் ஆட்சியரின் பாா்வைக்கு கொண்டுசெல்லும் வகையில் மனு கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.