தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘கற்போதும், எழுதுவோம்’ மையங்களில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

நாகையில் உள்ள வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையத்தில் கல்வி கற்போரிடம் உரையாடிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி.

Updated On :19 டிசம்பர் 2020, 3:15 am

DIN

நாகையில் உள்ள வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகையை அடுத்த பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பால்பண்ணைச்சேரி நகராட்சித் தொடக்கப்பள்ளி ஆகிய மையங்களில் செயல்படும் வயது வந்தோருக்கான கற்போம், எழுதுவோம் மையங்களில் ஆய்வு செய்த அவா், அங்கு கல்வி கற்பவா்களிடம் உரையாடி, கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்டத் திட்ட அலுவலா் ஏ. பீட்டா் பிரான்சிஸ், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) த. ஜெயந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஐயப்பன், சச்சிதானந்தம் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.