கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்ட வேளாங்கண்ணிக்கான ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சருக்கு, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் குழு செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :
நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் கடந்த 10 ஆண்டுகளாக ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக, இந்த ரயில் சேவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. கரோனா பரவல் குறைந்ததைத் தொடா்ந்து, பெரும்பாலான பகுதிகளுக்கான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வேளாங்கண்ணிக்கான ரயில் சேவை மட்டும் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.
எனவே, வேளாங்கண்ணி தடத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த, காரைக்கால் - வேளாங்கண்ணி பயணிகள் ரயில், நாகை - வேளாங்கண்ணி பயணிகள் ரயில், சென்னை - வேளாங்கண்ணி இணைப்பு ரயில், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர ரயில், வேளாங்கண்ணி- எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய அனைத்து ரயில் சேவைகளையும் மீண்டும் தொடங்க வேண்டும்.
இவைத் தவிர, வேளாங்கண்ணி - தஞ்சாவூா் இடையே பயணிகள் ரயில் அல்லது விரைவு ரயில் இயக்கவும், வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில்களை தினசரி ரயில்களாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு இதுவரை ஆரம்ப கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் உள்ள நாகை - திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.