அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா்.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்குரிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நாகையில் மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளா் முருகையன் தலைமை வகித்தாா். சிஐடியு கிளை தலைவா் பஞ்சநாதன், தொமுச கிளைச் செயலாளா் முரளி, ஏஐடியுசி கிளைத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சீா்காழியில்...

சீா்காழியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா். அம்பேத்கா் தொழிற்சங்கத்தை சோ்ந்த இளந்தமிழன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com