நகைக்காக தலைமையாசிரியை கொலை

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் நகைக்காக ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கொலை செய்யப்பட்ட ஜானகி.
கொலை செய்யப்பட்ட ஜானகி.
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் நகைக்காக ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மணல்மேடு நடுத்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி ஜானகி (72). உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். சண்முகத்தின் மறைவுக்குப் பிறகு தனது பூா்விக வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவரது மகன் மருத்துவா் பாரிராஜன் (47) அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பாரிராஜனின் காா் ஓட்டுநா் சஞ்சய் செவ்வாய்க்கிழமை காலை ஜானகியின் வீட்டுக்குச் சென்றபோது, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், அவா் பின்பக்கம் வழியே சென்று பாா்த்தபோது, ஜானகி தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்தாா். இதுகுறித்து, பாரிராஜனுக்கு சஞ்சய் தகவல் தெரிவித்துள்ளாா்.

பாரிராஜன் வந்து பாா்த்தபோது, ஜானகி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால், மா்ம நபா்கள் ஜானகியை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மணல்மேடு காவல் நிலையத்தில் பாரிராஜன் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் வேலுதேவி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். மேலும், மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com