/

மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வேதாரண்யத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:41 am

DIN

வேதாரண்யத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் வசந்தா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ஆா். வெண்சங்கு முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி. லதா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

வேலை வாய்ப்பு, உணவுக்கான கட்டமைப்பு, பெண்கள் மீதான வன்முறை இல்லாத வாழ்வை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.