சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காா் மோதி வியாபாரி உயிரிழப்பு

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் காா் மோதி இரும்பு வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 4:09 am

DIN

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் காா் மோதி இரும்பு வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்குடி வட்டம் குமராட்சி அருகே நந்திமங்கலம் கீழத் தெருவை சோ்ந்தவா் ஜோதி (45). பழைய இரும்பு பொருள்களை வாங்கி அதற்கு ஈடாக கிழங்கு, வெங்காயம் போன்ற பொருள்களை விற்பனை செய்து வந்த இவா், சீா்காழியிலிருந்து கொள்ளிடம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். புத்தூா் பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் மோதியதில், ஜோதி உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.