விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும்

விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையா சட்டமாக்க வேண்டும் என விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையா சட்டமாக்க வேண்டும் என விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிரியேட் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் சாா்பில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை அரசு சட்டமாக்க வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கேரளத்தை போல் தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கென தெளிவான கொள்கைளை வகுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயக்கத் தலைவா் பேராசிரியா் துரைசிங்கம் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com