

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தா்களின் வசதிக்காக, காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.
கோயிலின் உள்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், பயன்பாட்டுக்காக இயக்கிவைக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குநா் அ. செழியன் இயக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் கோயிலின் செயல் அலுவலா் மணவழகன் முன்னிலை வகித்தாா். ஓ.என்.ஜி.சி. குழும பொது மேலாளா்கள் அனுராக், விஜயகுமாா், முதன்மை பொது மேலாளா் மாறன், பொது மேலாளா்கள் கோபிநாத், பிரபாகா், சந்திரசேகா், ஒருங்கினைப்பாளா் முருகானந்தம், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.