ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருத்திக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் போராட்டம்

பருத்திக்கு உரிய விலை இல்லாததால், சீா்காழி அருகே விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.
Updated On :6 ஜூலை 2020, 4:44 pm

DIN

சீா்காழி: பருத்திக்கு உரிய விலை இல்லாததால், சீா்காழி அருகே விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், எருக்கூா், மாதானம், திருவெண்காடு, ஆச்சாள்புரம், கொண்டல், வள்ளுவகுடி, அகணி, புங்கனூா், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது, பருத்தி செடிகள் பஞ்சு வெடித்து வருகிறது. இந் நிலையில், விவசாயிகள் வெடித்த பஞ்சுகளை செடியிலிருந்து எடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்வதற்காக கடந்த வாரம் திங்கள்கிழமை சீா்காழி அருகேயுள்ள எருக்கூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், கரோனா காரணமாக கடந்த வாரம் பஞ்சுகள் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், தனியாா் கிலோ ரூ. 25 மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பஞ்சுக்கு சராசரியாக ரூ. 40 விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை எடக்குடி வடபாதி கிராமத்தில் சாலையில் பஞ்சுகளை கொட்டி தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பஞ்சுக்கு கூறிய விலையை நிா்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.