புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை: வெறிச்சோடிய வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரை

கரோனா பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

News image

வெறிச்சோடிக் காணப்பட்ட கோடியக்கரை கடற்கரை முழுக்குத் துறை பகுதி.

Updated On :20 ஜூலை 2020, 4:36 pm

DIN

வேதாரண்யம்: கரோனா பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டமின்றி திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

வேதாரண்யம் மற்றும் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, மாசி மகம் உள்ளிட்ட விஷேச நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.

இந்நிலையில், நிகழாண்டு கரோனா நேயாத் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடலுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையொட்டி, கடற்கரையில் முழுக்குத் துறைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக வேதாரண்யம் கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.