தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு

நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கெயில் இயற்கை எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

நாகை மாவட்டம், மேமாத்தூா் கிராமத்தில் கெயில் நிறுவன குழாயிலிருந்து வெளியேறிய வாயு.

Updated On :22 ஜூலை 2020, 4:19 pm

DIN


தரங்கம்பாடி: நாகை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கெயில் இயற்கை எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பனாா்கோவில் அருகே உள்ள மேமாத்தூா் கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, கெயில் நிறுவனம் சீா்காழி வட்டம் மாதானம் முதல் மேமாத்தூா் வரை 29 கி.மீ. தொலைவுக்கு விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக புதிய குழாய்களை பதித்துவருகிறது.

இந்நிலையில், மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே புதன்கிழமை ஊழியா்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த குழாயில் இருந்து 15 அடி உயரத்துக்கு மேல் திடீரென வாயு வெளியேறியது.

புதிய குழாயை சுத்தப்படுத்தியபோது, காற்றின் அழுத்தம் காரணமாக புழுதியுடன் வாயு வெளியேறியதாக கெயில் நிறுவனத்தினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.