நாகப்பட்டினம்: பணியின்போது உயிரிழந்த தீயணைப்புத் துறை வீரரின் குடும்பத்துக்கு, நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரா்களின் பங்களிப்பாக ரூ.1. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தீயணைப்புத் துறை நாகை மாவட்ட அலுவலா் பி. சத்தியகீா்த்தி தெரிவித்தது:
பெரம்பலூா் மாவட்டம், செல்லியம்பாளையத்தில் ஜூலை 12-ஆம் தேதி கிணற்றில் விழுந்தவா்களை மீட்கும் பணியின்போது, துறைமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா் ராஜ்குமாா் வீரமரணடைந்தாா்.
இவரது குடும்பத்துக்கு உதவிடும் வகையில், நாகை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா்கள் மற்றும் வீரா்களின் பங்களிப்பாக ரூ.1.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.