ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.
Published on
Updated on
1 min read

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் தியாகராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் சாலை சீரமைப்பு, கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு, மின்விளக்கு பராமரிப்பு குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அண்ணா மண்டபத்தில் கூட்டம்: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் மூடப்பட்டது. இதனால், ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான அண்ணா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com