ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு சொந்தஊரான மயிலாடுதுறையில் அஞ்சலி

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
Updated On :31 ஜூலை 2020, 1:36 pm

DIN

சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினரும்,
சாகித்ய விருது பெற்றவருமான சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார். பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்று கொண்ட சா.கந்தசாமி, சமூகத்தைப் பாதிக்கும் தீங்குகளை எதிர்க்கும் ஆயுதமாக தனது எழுத்தைப் பயன்படுத்தியயவர். 

தேசிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முகங்களில் ஒருவராகவும், பல்வேறு மாநில மொழி படைப்பாளர்கள் மதிக்கத்தக்க இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சா.கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதையொட்டி, மயிலாடுதுறை  பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு  எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், அறம்செய் சிவக்குமார், செம்பனார்கோவில் டெம்பிள்சிட்டி தலைவர் குணசீலன், காவிரி அமைப்பின் நிர்வாகிகள் அகஸ்டின் விஜய், சுந்தர், கவி.மோகன், கவி.கார்த்தி, கோபு, கார்த்திக் ஆண்டனி, யோகேஸ்வரன், சூர்யா, அறம்செய் அப்துல்லா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.