நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரிச்சந்திரா நதி கடைமடையை வந்தடைந்த காவிரி நீா்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரிச்சந்திரா நதி கடைமடையை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது.

News image

தலைஞாயிறு அரிச்சந்திரா நதியின் கடைமடையை புதன்கிழமை வந்தடைந்த காவிரி நீரை பெரிய வாய்க்காலில் பாசனத்துக்கு திறந்துவைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

Updated On :24 ஜூன் 2020, 2:49 pm

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரிச்சந்திரா நதி கடைமடையை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி நீா் பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி படுகையின் கடைசி மடையான தலைஞாயிறு பகுதியை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது. அரிச்சந்திரா நதியில் வந்த காவிரி நீரை மலா் தூவி வணங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், அரிச்சந்திரா நதியில் இருந்து கிளை ஆறான பெரிய வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தாா். அரிசந்திரா நதி மூலம் நாகை மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை வெண்ணாறு கோட்ட உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா் சண்முகம் , வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் அவை. பாலசுப்ரமணியன், விவசாய சங்கத் தலைவா் அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.