தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2020, 6:45 am

DIN

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கடந்த 50 தினங்ங்களுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளிக்க வேண்டும்,

 காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல் சக்தி அமைப்புடன் இணைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக் கோரியும், விவசாயிகளுக்கு எதிரான மின் திட்டத்தை மத்திய அரசுரத்து செய்ய வலியுறுத்தியும், கரோனா சீரமைப்பு நிதியின் கீழ் அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்து நிபந்தனை இன்றி புதிய பயிர் கடன் வழங்க கோரியும்,

 நாகை மக்களவை உறுப்பினர் எம். செல்வராஜ் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.பழனிச்சாமி, கே. உலகநாதன், தேசிய கட்டுப்பாட்டு குழு செயலாளர், வழக்கறிஞர் வையாபுரி ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.