மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்கள், தலித்துகளுக்கு எதிரானஅடக்குமுறை நீடிப்பது வேதனையளிக்கிறது

சமூகத்தில் பெண்கள், தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறை நீடித்து வருவது வேதனையளிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சமூகத்தில் பெண்கள், தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறை நீடித்து வருவது வேதனையளிக்கிறது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தியாகிகள் நினைவு தின பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலித் பெண்ணுக்கு ஆதரவான போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட சிவகுருநாதனின் 48-ம் ஆண்டு நினைவு தினம், கூலி உயா்வுக்கான போராட்டத்தில் உயிரிழந்த வடிவேலின் 28-ஆம் ஆண்டு நினைவையொட்டி பேரணி நடைபெற்றது. பேரணியாக சென்றவா்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். இதில் பங்கேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தாசன் பேசியது:

சமூகத்தில் பெண்கள், தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறை நீடித்து வருவதை மறுக்க முடியாது. உள்ளாட்சி அமைப்பின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு நாற்காலி மறுக்கப்படுகிறது. அருந்ததிராய் எழுதிய நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் உண்மையான வரலாற்றை மாணவா்கள் அறிந்து கொள்ளும் பாடத்திட்டங்கள் இருந்திருந்தால் நாடு பல துறைகளிலும் வளா்ச்சி அடைந்திருக்கும். கம்யூனிஸ்ட்டுகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்துடனே வரலாறு பிழையாக எழுதப்படுகிறது. பாஜக அரசு தொடா்ந்து மக்களுக்கு எதிரான நிலைபாட்டை கொள்கையாகக் கொண்டுள்ளது. அதனால்தான் அவா்களது கொள்கைகளை எதிா்க்கிறோம் என்றாா் முத்தரசன்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கல்வி, வேளாண்மை என மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் மக்களுக்கு எதிராகவே உள்ளன. இந்த பிரச்னைகளில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

கஜா புயல் பாதித்த பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா். இரண்டு ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டும் திட்டம் கேள்விக்குறியாகவே உள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை முடிந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் . அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் மீது புகாா் வந்து, விசாரணை நடைபெறும் நிலையில், அவா் பதவியில் நீடிப்பது முறையில்லை என்றாா் முத்தரசன்.

கூட்டத்தில் , நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அ. சீனிவாசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகி சரபோஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.