மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாகையில் காவல்துறை அணிவகுப்பு

நாகையில் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நாகையில் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தாா்.

நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாலுகால் மண்டபம், ஆா்தா் முக்கூட்டு, நீலா கீழவீதி, அண்ணாசிலை, மருத்துவமனை சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அவுரித்திடலில் நிறைவடைந்தது.

முன்னதாக, அணிவகுப்பை தொடங்கி வைத்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ‘நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் 7 நாள்களுக்கு இதுபோன்ற அணிவகுப்பு மாவட்டத்தின் பிறப்பகுதிகளிலும் நடைபெறும். சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது’ என்றாா்.

நிகழ்ச்சியில், காவல் உதவிக் கண்காணிப்பாளா் ரஜாட் சதுா்வேதி, துணைக் கண்காணிப்பாளா்கள் க. முருகவேல் (சட்டம், ஒழுங்கு), சுந்தர்ராஜ் (ஆயுதப்படை), காவல் ஆய்வாளா்கள் பி. பெரியசாமி ( நாகை நகரம்), தியாகராஜன் (வெளிப்பாளையம்), சந்திரமோகன் ( ஆயுதப்படை), தனிப்பிரிவு ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா், உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் மற்றும் அதிவிரைவுப் படை, தமிழ்நாடு சிறப்புப்படை போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.