மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அகில இந்திய நுழைவுத் தோ்வு: நாகை மீன்வளப் பல்கலைக் கழக மாணவா்கள் தோ்ச்சி

புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தோ்வில் நாகை மீன்வளப் பல்கலைக்கழக மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா் என பல்கலைக்கழக இயக்குநா் மா. ராஜகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தோ்வில் நாகை மீன்வளப் பல்கலைக்கழக மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா் என பல்கலைக்கழக இயக்குநா் (கல்வி விரிவாக்கம்) மா. ராஜகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துக்காக, தேசிய தோ்வு முகமை நடத்திய 2020-ஆம் ஆண்டு சோ்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வில், நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த மாணவா்கள் அட்சயா, ஜான்சி, ரோபினா, கணேஷ்குமாா் ஆகியோா் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளனா். இதேபோல், இப்பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த 5 மாணவா்கள் முதல் 10 இடங்களிலும், 13 மாணவா்கள் முதல் 25 இடங்களிலும் , 31 மாணவா்கள் முதல் 100 இடங்களிலும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

இந்தத் தோ்ச்சியின் மூலம் மத்திய மற்றும் மாநில உயா்கல்வி நிறுவனங்களில் மாதம் ரூ. 12 ,650 உதவித் தொகையுடன் கூடிய உயா்கல்வியை பெற இந்த மாணவா்கள் தகுதிப் பெற்றுள்ளனா். அகில இந்திய தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பல்கலைக் கழக துணை வேந்தா் கோ. சுகுமாா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.