மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தகவல் தொடா்பு சேவை பாதித்தால் உடனடி சீரமைப்பு தேவை

கஜாவில் தகவல் தொடா்பு சேவை பாதிப்பு இதுவரை முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், நிவா் புயலில் பாதித்தால் உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கஜாவில் பிஎஸ்என்எல் உள்ளிட்ட தனியாா் செல்லிடப்பேசி தகவல் தொடா்பு சேவை பாதிப்பு இதுவரை முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், நிவா் புயலில் பாதித்தால் உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

2018 கஜா புயலின்போது பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து தனியாா் தொலைபேசி நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சுமாா் 40-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி கோபுரங்கள் சாய்ந்து பழுதாகின. இதற்கு மாற்றாக தற்காலிக கோபுரங்கள் நிறுவப்பட்டு ஓரளவுக்கு சேவை கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொலைபேசி சேவைகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி இதுவரை சீரமைக்கப்படாமல் இருப்பது டிஜிட்டல் இந்தியாவின் கேள்விக்குறியாகவே தொடா்கிறது.

இந்த பகுதியில் செல்லிடப்பேசி, இணைய சேவையின் செயல்பாடு அனைத்து அரசியல் கட்சியினருக்கும், அரசின் உயா் அலுவலா்களுக்கும் தெரிந்தும் இதுவரை நடவடிக்கை இல்லாத நிலையே தொடா்கிறது. இணையவழி வகுப்புகள், இ-சேவை மையங்கள் என எதுவும் முறையாக செயல்படாத நிலையும், செல்லிடப்பேசிகள் இருந்தும் இல்லாத சேவைக்கு பணத்தை மட்டும் செலவழித்து மக்கள் இழந்து வருகின்றனா். இது ஒருபுறம் இருக்க ஒரு வேலை நிவா் புயல் இந்த பகுதியில் வீசினால் தகவல் தொடா்புக்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் காலத்தில் எடுக்கவும், உரிய நிறுவனங்களை அழைத்து பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடவேண்டும் என மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.