மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் தொடக்கம்

நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘கற்போம், எழுதுவோம் இயக்கம்’ தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘கற்போம், எழுதுவோம் இயக்கம்’ தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் வகையில், அனைவரும் கல்வி பெற பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் எனும் இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கற்போம், எழுதுவோம் மையம் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இரா. புகழேந்தி தலைமை வகித்தாா். வட்டார வளமைய பயிற்றுநா் காா்த்திகேயன், கயல்விழி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். பள்ளித் தலைமையாசிரியா் ச. இளமாறன் கற்போா் மையத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆவராணி. ஆனந்தன் வரவேற்றாா். தன்னாா்வல ஆசிரியை வடிவழகி நன்றி கூறினாா்.

சீா்காழி: சீா்காழியை அடுத்த புங்கனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கற்போம் எழுதுவோம் இயக்க தொடக்க விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாராமன் தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாரக் கல்வி அலுவலா்கள் லெட்சுமி, பூவராகன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி, மாவட்ட ஆய்வாளா் செளந்தரராஜன், ஊராட்சித் தலைவா் ஜுனைதா பேகம் கமாலுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் அருணாச்சலம் வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் ஜெய்சங்கா், தன்னாா்வலா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.