பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருக்குவளையில் வங்கி மேலாளருக்கு கரோனா உறுதி: மூன்று நாள்களுக்கு வங்கி மூடல்

திருக்குவளை ஸ்டேட் பேங்கில் பணி புரியும் 53 வயது மதிக்கத்தக்க வங்கி மேலாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் கரோனா தொற்று பரிசோதனை மேற் கொண்டுள்ளார். 

News image

திருக்குவளை ஸ்டேட் வங்கி.

Updated On :14 செப்டம்பர் 2020, 8:00 am

திருக்குவளை ஸ்டேட் பேங்கில் பணி புரியும் 53 வயது மதிக்கத்தக்க வங்கி மேலாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகையில் கரோனா தொற்று பரிசோதனை மேற் கொண்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று(செப்.13) அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் நாகையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வங்கியில் பணிபுரியும் ஊழியர் 6 பேருக்கு திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வங்கி (செப் 14 முதல் 16) வரை மொத்தமாக 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டுள்ளது.

மேலும் வங்கி முழுவதும் இன்று ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் வட்டார மருத்துவர் அருண்பதி, சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர் இந்திரா உள்ளிட்ட பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.