மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் மசோதாவை கண்டித்துகாரைக்காலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து காரைக்காலில் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.
Updated On :28 செப்டம்பர் 2020, 7:00 pm

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து காரைக்காலில் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்காலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்றது.

புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஆனந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் இதில் பங்கேற்றனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்டங்களால், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை கிடைக்காமல்போகும். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இல்லாமல் போய்விடும்.

காா்ப்பரேட் நிறுவனங்கள் இதன்மூலம் பெரும் ஆதாயமடையும். உணவுப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் இல்லாமல்போவதற்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது என ஆா்ப்பாட்டதில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 200 போ் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.