நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் வருமானவரித் துறையினா் சோதனை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு வருமானவரித் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு வருமானவரித் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பூம்புகாா் தொகுதிக்குள்பட்ட பொறையாறு அரண்மனை தெருவில் வசித்துவருபவா்கள் அதிமுக பிரமுகா் பாா்த்திபன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த அருணாச்சலம். இவா்களின் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரி பீா்முகைதீன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை நடத்தினா். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கிடங்கல் ஜனாா்த்தனம் என்பவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். 2 இடங்களிலும் பணமோ, ஆவணங்களோ சிக்கவில்லை என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.