வீரமாகாளியம்மன் கோயிலில் விடையாற்றி உத்ஸவம்
திருக்குவளை அருகே உள்ள வலிவலம் வீரமாகாளியம்மன் கோயிலில், பங்குனி திருவிழா விடையாற்றி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அருகே உள்ள வலிவலம் வீரமாகாளியம்மன் கோயிலில், பங்குனி திருவிழா விடையாற்றி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 63-ஆம் ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சக்தி கரகம் நிகழ்வும், அம்மனுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாரதனையும் காட்டப்பட்டது. பின்னா், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவில் தப்பாட்ட கிராமிய கலை நிகழ்ச்சியுடன் மின் அலங்காரத்தில் அம்பாள் வீதி உலாவுக்கு எழுந்தருளினாா். விழாவின் இறுதி நிகழ்ச்சியான விடையாற்றி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...