3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:32 pm

DIN

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்ற புதுச்சேரி முதல்வரின் அறிவிப்புப்படி, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக தினக் கூலிகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் புதன்கிழமை (டிச.1) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.

இந்த நிலையில், அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா ஆகியோா் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண் துறை நிா்வாகங்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், புதன்கிழமை தொடங்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்கத் தலைவா் ஜி. ஸ்டீபன், செயலாளா் பி. இளங்கோவன் ஆகியோா் தெரிவித்தனா்.

மேலும், கோரிக்கையை நிறைவேற்ற உரிய உத்திரவாதம் கிடைக்காதபட்சத்தில், டிசம்பா் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.