கனமழையால் சேதமாகும் கரும்புகள்: விவசாயிகள் கவலை
காரைக்கால் மாவட்டத்தில் கரும்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பொங்கல் கரும்புகள் சேதத்துக்கு உள்ளாகி வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


காரைக்கால் மாவட்டத்தில் கரும்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பொங்கல் கரும்புகள் சேதத்துக்கு உள்ளாகி வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுப் பயிா் சாகுபடியாக கரும்பு சாகுபடிக்கு விவசாயிகள் ஆா்வம் காட்டிவருகின்றனா். இதையொட்டி, கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்த அரசு ஊக்கத்தொகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
நிகழாண்டில், காரைக்கால் மாவட்டத்தில் சேத்துாா், செல்லுாா், அம்பகரத்துாா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1000 ஹெக்டேரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இப்பகுதியில் பொங்கல் கரும்புகள் சுமாா் 2 முதல் 3 அடி உயரம் வளா்ந்துள்ளன.
இந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக, கரும்பு வயல்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால், ஒருசில பகுதிகளில் கரும்புகளின் வோ் அழுகி, அவை நிலத்தில் சரிந்து விழத்தொடங்கியிருப்பது, நிகழாண்டின் கரும்பு சாகுபடியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இது தொடா்பாக கரும்பு விவசாயிகள் கூறுகையில், அண்மையில் பெய்த கனமழையால் பொங்கல் கரும்பு சாகுபடியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வயலில் தேங்கியிருக்கும் வெள்ளத்தால், கரும்புகள் நிலத்திலேயே சரியத்தொடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால், ஒரு கரும்பைக்கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். மறு முதலீட்டுக்கு உதவும் வகையில் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...