நாகை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை தமிழ்நாடு கடல்சாா் வாரிய துணைத் தலைவரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான க. பாஸ்கரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளின் கள நிலை குறித்து வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் க. பாஸ்கரன், நாகையை அடுத்த சிக்கல், அத்திப்புலியூா் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று, மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், துணை ஆட்சியா் சௌமியா (பயிற்சி), மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், கோட்டாட்சியா்கள் இரா. மணிவேலன், துரைமுருகன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


