நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:54 pm

DIN

நாகையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை நாலுகால் மண்டபம் பகுதியில் தொடங்கிய பேரணி, நீலா கீழவீதி, அண்ணா சிலை, மருத்துவமனை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று, புதிய பேருந்து நிலையம் அருகே அவுரித்திடலில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தாஜூதீன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாவட்டச் செயலாளா் ஹாஜா அலாவுதீன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டநிா்வாகிகள் அக்பா்அலி, கல்லாா் மொய்தீன், மருத்துவா்கள் செந்தில்குமாா், ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.