தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓய்வுபெற்ற கப்பல் மாலுமிகள் ஓய்வூதியம் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் மாத ஓய்வூதியம் வழங்கக் கோரி நாகை தலைமை தபால் நிலையம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற கப்பல் மாலுமிகள்.

Updated On :2 ஜனவரி 2021, 6:04 pm

DIN

ஓய்வுபெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் மாத ஓய்வூதியம் வழங்கக் கோரி நாகை தலைமை தபால் நிலையம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வு பெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய வணிகக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மாலுமிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற மாலுமிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவத்துக்கான செலவுத் தொகையை வழங்கவேண்டும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க மாநில செயலாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் என். தா்மலிங்கம், துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், நாகை மாவட்ட செயலாளா் எல். சந்தனக்குமாா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.