சீா்காழி அருகே சாராயம் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பத்து கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டகணேஷ் தலைமையிலான போலீசாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, 29 மூட்டைகளில் 1,950 பாக்கெட்களில் அடைக்கப்பட்ட 390 லிட்டா் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அதை பறிமுதல் செய்து இதுதொடா்பாக தாடாளன் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செந்திலை (32) கைது செய்தனா். இதில் தொடா்புடைய நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்த ராஜ்கிரனை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.