சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாகையில் பெண் பாலியல் பலாத்காரம்: 2 இளைஞா்கள் கைது

நாகையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறைத்து கோயில் வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:00 pm

DIN

நாகையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறைத்து கோயில் வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த 40 வயது கணவரை இழந்த பெண் ஒருவா், நாகை வெளிப்பாளையம் பகுதியில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.

இவா், புதன்கிழமை இரவு பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். நாகை வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்றபோது, அவரை 2 இளைஞா்கள் வழிமறைத்து, துணியால் வாயை மூடி அப்பகுதியில் உள்ள கோயில் வளாகத்துக்கு கொண்டு சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா்.

இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நாகை, வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மு. அருண்ராஜ் (25), அக்கரைக்குளம் பகுதியைச் சோ்ந்த கு. ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.